சாலையில் சென்று கொண்டிருந்தவரிடம் செல்போனை பறித்து சென்ற கொள்ளையன் ; துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவை : கோவை இடையர்பாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த நபரிடமிருந்து வழிப்பறி கொள்ளையன் செல்போன் பறித்து சென்ற சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் தைரியமாக கொள்ளையனை துரத்திப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை : கோவை இடையர்பாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த நபரிடமிருந்து வழிப்பறி கொள்ளையன் செல்போன் பறித்து சென்ற சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் தைரியமாக கொள்ளையனை துரத்திப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு அருந்தி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள், அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.

இதையடுத்து, அரவிந்த் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவரின் உதவியுடன் செல்போனை பறித்து சென்ற கொள்ளையர்களை துரத்திச் சென்றார்.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கொள்ளையர்களை, இடையர்பாளையம் ஜங்ஷன் அருகே அரவிந்தும் அப்பகுதி மக்களும் சுற்றி வளைத்தனர்.

அப்போது, சுதாரித்துக்கொண்ட ஒரு கொள்ளையன் பொதுமக்களிடம் இருந்து தப்பித்து சென்று விட்டார்.

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கொள்ளையன் பொதுமக்களால் சிறைபிடிக்கப்படவே, ஆத்திரமடைந்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் தகவலறிந்து வந்த துடியலூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து கொள்ளையனை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரசணையில், இந்த வழிப்பறி கொள்ளையன் உக்கடம் ஜி எம் நகர் பகுதியை சேர்ந்தவர் சனோஃப் என்பதும் ஏற்கனவே மூன்று இடங்களில் செல்போனை திருடிவிட்டு நான்காவது இடத்தில் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார், சனோஃப்பை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த கொள்ளையரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...