கோவை : வால்பாறையில் மாட்டுத்தொழுவமாக கல்லூரி கலையரங்கம் மாறியுள்ள நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை : வால்பாறையில் மாட்டுத்தொழுவமாக கல்லூரி கலையரங்கம் மாறியுள்ள நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது அரசு கலை அறிவியல் கல்லூரி. இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கல்லூரி வளாகத்தில் ரூ 25 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
சமீப காலமாக, கல்லூரி கலையரங்கம் மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது. முன்னதாக, இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக செயல்பட்டு வந்தபோது, அடிக்கடி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது, எவ்வித நிகழ்ச்சிகள் நடைபெறாமல் மாட்டு உரிமையாளர்களுக்கு சாதகமாக மாறி விட்டது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது அரசு கலை அறிவியல் கல்லூரி. இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கல்லூரி வளாகத்தில் ரூ 25 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
சமீப காலமாக, கல்லூரி கலையரங்கம் மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது. முன்னதாக, இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக செயல்பட்டு வந்தபோது, அடிக்கடி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது, எவ்வித நிகழ்ச்சிகள் நடைபெறாமல் மாட்டு உரிமையாளர்களுக்கு சாதகமாக மாறி விட்டது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.