நீதிபதிகள் தேர்வில் தமிழ் மொழி பாடம் ரத்து ; அரசாணையை ரத்து செய்யக்கோரி த.பெ.தி.க மனு

கோவை : கீழமை நீதிபதிகள் தேர்வில் வேற்று மாநிலத்தவர்கள் பங்கேற்பதை அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : கீழமை நீதிபதிகள் தேர்வில் வேற்று மாநிலத்தவர்கள் பங்கேற்பதை அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி மூலமாக நடத்தப்படும் தேர்வாணைய தேர்வுகளில், அனைத்து மாநிலத்தவரும் கலந்து கொள்ளலாம் என கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தும் வகையில் இந்தாண்டு முதல் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே பிற மாநில பெயர்களை பதாகைகளில் எழுதி கழுத்தில் அணிந்தபடி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர்கள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தேர்வாணைய தேர்வில் தமிழ் மொழி பாடம் ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து பேசிய அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தமிழக அரசின் இந்த அரசாணை காரணமாக தமிழகத்தின் கீழமை நீதிமன்றங்களில் தமிழர்கள் நீதிபதிகளாகவும், நடுவர்களாகவும் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் உருவாகும் எனவும் வேறு மாநில நீதிபதிகள் பணியில் அமர்த்தப்பட்டால் சாமானிய மக்கள் வழக்கு ஆவணங்களை நீதிபதிக்கு ஏற்றார் போல், இந்தி அல்லது பிற மொழிகளில் வழங்க வேண்டிய சிக்கல் உருவாகும் என்பதால் இதனை திரும்ப பெற வேண்டும் என ஆட்சியர் மூலமாக அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...