அரசு கேபிளில் கொள்ளை கட்டணம் ; ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முட்டிபோட்டு ஆட்சியரிடம் மனு

கோவை : அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர் மீது நடவடிக்கை கோரி முட்டி போட்டு ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை : அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர் மீது நடவடிக்கை கோரி முட்டி போட்டு ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஜெகதீசனார் என்பவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், தான் வசித்து வரும் பகுதியில் இமயம் ஸ்டார் விஷன் என்ற பெயரில் வெற்றிவேல் என்பவர் அரசு செட்டாப் பாக்ஸ் சேவை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும், நிர்மான கட்டணமாக ரூ.200 மட்டுமே வசூலிக்க வேண்டும், மாதம் கட்டணமாக 154 மட்டுமே வாங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில், செட்டாப் பாக்ஸ்களுக்கு 300 ரூபாயும், நிர்மான கட்டணமாக 180 ரூபாயும் மாதம் 180 ரூபாய் கட்டணமாகவும், வெற்றிவேல் வசூலித்து வருவதாக அம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் பல லட்சம் ரூபாயை வெற்றிவேல் மோசடி செய்வதாகவும் இது தொடர்பாக புகார் அளிக்க அரசு அறிவித்துள்ள எண்களுக்கு அழைத்தால் யாரும் எடுப்பதில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உரிய நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஜெகதீசனார் ஆட்சியர் அலுவலகத்தில் முட்டி போட்டு சென்று மனு அளித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...