சரவணம்பட்டி காவல் எல்லையில் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழா

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சரவணம்பட்டி காவல் எல்லையில் புதியதாக 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்கவிழா நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் இந்த விழாவை துவங்கி வைத்தார்.

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சரவணம்பட்டி காவல் எல்லையில் புதியதாக 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்கவிழா நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் இந்த விழாவை துவங்கி வைத்தார்.

கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை,கொள்ளை,வழிப்பறி, ஆள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும் மூன்றாம் கண் என சொல்லப்படுகிற கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.

இதில், ஆர்எஸ்புரத்தில் துவங்கி, பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, காட்டூர் காவல் எல்லை, போத்தனூர் காவல் எல்லை, சிங்காநல்லூர் காவல் எல்லை என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் சரவணம்பட்டி காவல் எல்லையில் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவினை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் சரவணம்பட்டி காவல் நிலைய பகுதியில் துவங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் இந்த கண்காணிப்பு கேமரா வழங்கிய தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள், சமூக சேவகர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த கண்காணிப்பு கேமராக்கள், சரவணம்பட்டி காவல் எல்லையின் முக்கிய பகுதிகளான பெருமாள் கோவில் வீதி, ஸ்ரீராம் நகர், ராதா லேடீஸ் ஹாஸ்டல் பகுதி, சிவன் கோயில் பகுதி, கோவை சத்தி சாலை, உட்பட பல்வேறு பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காணிப்பு கேமரா அமைக்கும் நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், செல்வக்குமார், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல சரவணம்பட்டி காவல் எல்லையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்ட ஆய்வாளர் செல்வராஜ் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...