கோவை : விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனாலும் இளம் விஞ்ஞானிகள், இளைஞர்கள், மாணவர்கள் மனதில் தரையிறங்கியுள்ளதால் இந்தியா அறிவியல் வளர்ச்சி பெற்று வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார்.
கோவை : விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனாலும் இளம் விஞ்ஞானிகள், இளைஞர்கள், மாணவர்கள் மனதில் தரையிறங்கியுள்ளதால் இந்தியா அறிவியல் வளர்ச்சி பெற்று வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் செயல்படும் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி நிர்வாக அறங்காவலர் வெ.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் இரண்டு விண்ணில் ஏவப்பட்டது மூன்று காரணங்களுக்காக,
ஒன்று சந்திரயான் நிலவில் இருப்பதைத் தண்ணீர் உறுதி செய்தது அதனுடன் அங்குள்ள கனிமவளங்களைக் கண்டறியவும் அதனை உறுதி செய்யவும் அனுப்பப்பட்டது.
இரண்டாவது நிலவில் மெதுவாக விக்ரம் லேண்டரை தரையிறக்கி ஆய்வு செய்வது, மூன்றாவது இளைஞர்களுக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கும் அறிவியலாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் உலக நாடுகளுக்கு இணையாக நாமும் அறிவியலில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்டது.
இதில் ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்திருந்தாலும் இரண்டில் வெற்றி அடைந்திருக்கிறோம் என்பதுடன் அறிவியலில் இளைஞர்களின் கவனம் அதிகரித்திருப்பதைக் காண முடிந்ததாக கூறினார்.
மேலும், கிரிக்கெட்டிற்காக மட்டும் நள்ளிரவு வரை கண்விழித்து பார்த்த இளைஞர்கள் சந்திரயான் இரண்டில் விக்ரம் லேணடர் தரையிறங்குவதைக் காண ஆர்வமாக இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக கூறிய மயில்சாமி அண்ணாத்துரை, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனாலும் மாணவர்கள், இளைஞர்கள் மனதில் தரையிறங்கியது, சந்திரயான் 2வின் வெற்றி என கூறினார்.
மேலும், சந்திரயான் ஆர்பிட்டர் என்பது ஆறு ஆண்டுகளுக்கு நிலவைச் சுற்றி ஆய்வு செய்ய உதவும் எனவும் அதன் மூலம் கூகுள் மேப் போல நிலவின் வரைபடத்தை துல்லியமாக உருவாக்க ஆர்பிட்டர் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் முன்னர் அனுப்பிய சந்திரயானை விட, சந்திரயான் இரண்டு மூலம் நிலவை முப்பரிமாண படம் மூலம் காண முடிவதுடன் அங்குள்ள தண்ணீரின் ஆழம் பனிப்பாறைகள் குறித்த ஆய்வுக்கு அது உதவும் என கூறினார்.
ஏற்கனவே சந்திரயான் முதல் அனுப்பியது போல் இல்லாமல், தற்போது இளம் விஞ்ஞானிகள் அதிகம் நம்மிடம் உள்ளதாகவும் எனவே ஏற்கனவே நமக்கு கிடைத்த சந்திரயான் சமிக்கைகளைக் கொண்டு ஆராய உலகம் முழுவதும் அறிவியலாளர்கள் இணைந்து வருவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுகுணா, செயலாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் செயல்படும் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி நிர்வாக அறங்காவலர் வெ.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் இரண்டு விண்ணில் ஏவப்பட்டது மூன்று காரணங்களுக்காக,
ஒன்று சந்திரயான் நிலவில் இருப்பதைத் தண்ணீர் உறுதி செய்தது அதனுடன் அங்குள்ள கனிமவளங்களைக் கண்டறியவும் அதனை உறுதி செய்யவும் அனுப்பப்பட்டது.
இரண்டாவது நிலவில் மெதுவாக விக்ரம் லேண்டரை தரையிறக்கி ஆய்வு செய்வது, மூன்றாவது இளைஞர்களுக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கும் அறிவியலாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் உலக நாடுகளுக்கு இணையாக நாமும் அறிவியலில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்டது.
இதில் ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்திருந்தாலும் இரண்டில் வெற்றி அடைந்திருக்கிறோம் என்பதுடன் அறிவியலில் இளைஞர்களின் கவனம் அதிகரித்திருப்பதைக் காண முடிந்ததாக கூறினார்.
மேலும், கிரிக்கெட்டிற்காக மட்டும் நள்ளிரவு வரை கண்விழித்து பார்த்த இளைஞர்கள் சந்திரயான் இரண்டில் விக்ரம் லேணடர் தரையிறங்குவதைக் காண ஆர்வமாக இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக கூறிய மயில்சாமி அண்ணாத்துரை, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனாலும் மாணவர்கள், இளைஞர்கள் மனதில் தரையிறங்கியது, சந்திரயான் 2வின் வெற்றி என கூறினார்.
மேலும், சந்திரயான் ஆர்பிட்டர் என்பது ஆறு ஆண்டுகளுக்கு நிலவைச் சுற்றி ஆய்வு செய்ய உதவும் எனவும் அதன் மூலம் கூகுள் மேப் போல நிலவின் வரைபடத்தை துல்லியமாக உருவாக்க ஆர்பிட்டர் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் முன்னர் அனுப்பிய சந்திரயானை விட, சந்திரயான் இரண்டு மூலம் நிலவை முப்பரிமாண படம் மூலம் காண முடிவதுடன் அங்குள்ள தண்ணீரின் ஆழம் பனிப்பாறைகள் குறித்த ஆய்வுக்கு அது உதவும் என கூறினார்.
ஏற்கனவே சந்திரயான் முதல் அனுப்பியது போல் இல்லாமல், தற்போது இளம் விஞ்ஞானிகள் அதிகம் நம்மிடம் உள்ளதாகவும் எனவே ஏற்கனவே நமக்கு கிடைத்த சந்திரயான் சமிக்கைகளைக் கொண்டு ஆராய உலகம் முழுவதும் அறிவியலாளர்கள் இணைந்து வருவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுகுணா, செயலாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.