கோவை : வால்பாறையில் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை : வால்பாறையில் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் பல குழுக்களாகத் தேயிலை தோட்டப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இவைகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. வால்பாறையை அடுத்த வறட்டுப்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் 5 காட்டு யானைகள் நுழைந்தன. காட்டு யானைகளின் வருகையை அறிந்த மக்கள் ஒன்று திரண்டு குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகாமல் தீ பந்தம் காட்டி சத்தம் போட்டு விரட்டினர்.

தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய யானைகள் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் சுற்றுச் சுவரை இடித்து உள்ளே நுழைந்து பள்ளியின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. மேலும் சத்துணவு கூடத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை எண்ணை ஆகியவற்றை தின்று நாசப்படுத்தின.
தொடர்ந்து, அதிகாலை வரை முகாமிட்ட யானைகள் காலையில் அங்கிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்திலும் பீதியிலும் தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் பல குழுக்களாகத் தேயிலை தோட்டப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இவைகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. வால்பாறையை அடுத்த வறட்டுப்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் 5 காட்டு யானைகள் நுழைந்தன. காட்டு யானைகளின் வருகையை அறிந்த மக்கள் ஒன்று திரண்டு குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகாமல் தீ பந்தம் காட்டி சத்தம் போட்டு விரட்டினர்.

தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய யானைகள் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் சுற்றுச் சுவரை இடித்து உள்ளே நுழைந்து பள்ளியின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. மேலும் சத்துணவு கூடத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை எண்ணை ஆகியவற்றை தின்று நாசப்படுத்தின.
தொடர்ந்து, அதிகாலை வரை முகாமிட்ட யானைகள் காலையில் அங்கிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்திலும் பீதியிலும் தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.