Breaking : கோவையில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை செய்த சம்பவம் : வீடியோ காட்சிகள் வெளியானது

கோவை : கோவை கோவில்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட கீரணத்தம் அருகே ஆட்டோ ஓட்டுனரை 2 நபர்கள் சரமாரியாகத் தாக்கி கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை : கோவை கோவில்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட கீரணத்தம் அருகே ஆட்டோ ஓட்டுனரை 2 நபர்கள் சரமாரியாகத் தாக்கி கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த மனோகரனின் மகன் அருண்பிரசாத் (28). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில், அருண் பிரசாத் வழக்கம்போல வாடகைக்குச் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தரப்பினருடன் வாக்குவாதம் எழுந்ததாகக் கூறப்படுகிறது.



இதையடுத்து, அருண் பிரசாத் கீரணத்தம் அருகே டீ குடிக்க ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் கையில் கொண்டு வந்திருந்த கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுத்தும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர்.



இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அருண்பிரசாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டு நபர்கள் ஆட்டோ ஓட்டுனர் அருண் பிரசாத்தை தாக்கி கொலை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ஆட்டோ ஓட்டுனரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...