நீலகிரி : உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வெறி நாய்க்கடி மருந்து தயாரிக்கும் குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி : உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வெறி நாய்க்கடி மருந்து தயாரிக்கும் குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, ஆய்வக வளாகத்தில் அமைந்துள்ள லூயி பாஸ்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற வினாடி வினா, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ரேபீஸ் ஒரு உயிர்க்கொல்லி நோய் இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 20 பேர் இந்த நோயால் இறக்கின்றனர் ரேபீஸ் மனிதர்களுக்கு 99 சதவீதம் நாய்க்கடி மூலமே பரவுகிறது. இதில் 50 சதவீதம் சிறுவர்களே பாதிக்கப்படுகின்றனர் என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஊர்வலம், பாஸ்டியர் ஆய்வகத்தில் துவங்கி குன்னூர் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில் தென் மண்டலம் மருந்துகள் துணை கட்டுப்பட்டு அதிகாரி சாந்தி குணசேகரன் தலைமை வகித்தார், சென்னையை சேர்ந்த பி.சி.ஜி நிறுவன அதிகாரி சேகர், பட்டுப் பூச்சி நிலையம் டாக்டர் மோகன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ரிவெர்சைடு பள்ளி முதல்வர் பிரான்சிஸ் சேவியர், டாக்டர் இல்லோனா ஒட்டர் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஆய்வக வளாகத்தில் அமைந்துள்ள லூயி பாஸ்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற வினாடி வினா, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ரேபீஸ் ஒரு உயிர்க்கொல்லி நோய் இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 20 பேர் இந்த நோயால் இறக்கின்றனர் ரேபீஸ் மனிதர்களுக்கு 99 சதவீதம் நாய்க்கடி மூலமே பரவுகிறது. இதில் 50 சதவீதம் சிறுவர்களே பாதிக்கப்படுகின்றனர் என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஊர்வலம், பாஸ்டியர் ஆய்வகத்தில் துவங்கி குன்னூர் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில் தென் மண்டலம் மருந்துகள் துணை கட்டுப்பட்டு அதிகாரி சாந்தி குணசேகரன் தலைமை வகித்தார், சென்னையை சேர்ந்த பி.சி.ஜி நிறுவன அதிகாரி சேகர், பட்டுப் பூச்சி நிலையம் டாக்டர் மோகன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ரிவெர்சைடு பள்ளி முதல்வர் பிரான்சிஸ் சேவியர், டாக்டர் இல்லோனா ஒட்டர் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.