கோவை : கோவையில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை : கோவையில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை அண்ணாசாலை அருகே மாநகர காவல்துறை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நோக்கில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினர்.
சமீப காலங்களாக கோவை மாநகர காவல்துறையின் முயற்சியால் நூற்றுக்கு 60%பேர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
இதில் மீதமுள்ளவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நோக்கில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல காவல்துறையின் கெடுபிடியும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இன்று அண்ணாசாலை அருகே அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாளையொட்டி இலவச ஹெல்மெட் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துறை இயக்குனர் பிலிப் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கோவை அண்ணாசாலை அருகே மாநகர காவல்துறை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நோக்கில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினர்.
சமீப காலங்களாக கோவை மாநகர காவல்துறையின் முயற்சியால் நூற்றுக்கு 60%பேர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
இதில் மீதமுள்ளவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நோக்கில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல காவல்துறையின் கெடுபிடியும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இன்று அண்ணாசாலை அருகே அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாளையொட்டி இலவச ஹெல்மெட் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துறை இயக்குனர் பிலிப் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.