நீலகிரி : உதகை தமிழக விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வு குழு ஆய்வின் இரண்டு நாள் கூட்டம் நடந்தது.
நீலகிரி : உதகை தமிழக விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வு குழு ஆய்வின் இரண்டு நாள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு சட்டப் பேரவை உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். துணை செயலாளர் சிவசங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு முன்னிலை வகித்தனர்.

இக்குழு காலை பைக்காரா நீர் மின் நிலையத்தை ஆய்வு செய்தது. தொடர்ந்து, மாலையில் நடந்த ஆய்வு குழு கூட்டத்தில், எரிசக்தி குறித்து, 10 குறிப்பாணைகள் எடுத்து கொள்ளப்பட்டு அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. ஆய்வு குழு உறுப்பினர்கள் அலெக்சாண்டர், சிவக்குமார், ஓ.கே.சின்னராஜ், திராவிட மணி உட்பட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்திற்கு சட்டப் பேரவை உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். துணை செயலாளர் சிவசங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு முன்னிலை வகித்தனர்.

இக்குழு காலை பைக்காரா நீர் மின் நிலையத்தை ஆய்வு செய்தது. தொடர்ந்து, மாலையில் நடந்த ஆய்வு குழு கூட்டத்தில், எரிசக்தி குறித்து, 10 குறிப்பாணைகள் எடுத்து கொள்ளப்பட்டு அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. ஆய்வு குழு உறுப்பினர்கள் அலெக்சாண்டர், சிவக்குமார், ஓ.கே.சின்னராஜ், திராவிட மணி உட்பட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.