திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் உட்பட நாற்பது பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் உட்பட நாற்பது பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சையளிக்க தனி வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காலம் என்பதாலும், காற்றினாலும் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனையொட்டி திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் உள்ளிட்ட நாற்பது பேர் காய்ச்சலுக்கு என தனியாக அமைக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பத்து மருத்துவர்கள் கொண்ட குழு இந்த காய்ச்சல் பிரிவுக்கு என தனியாக அமைக்கப்பட்டு நோயாளிகளை இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகளின் நிலவேம்பு கசாயம், ஓஆர்எஸ் கரைசல் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்தால் அதற்குண்டான சிகிச்சைகள் அளிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சையளிக்க தனி வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காலம் என்பதாலும், காற்றினாலும் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனையொட்டி திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் உள்ளிட்ட நாற்பது பேர் காய்ச்சலுக்கு என தனியாக அமைக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பத்து மருத்துவர்கள் கொண்ட குழு இந்த காய்ச்சல் பிரிவுக்கு என தனியாக அமைக்கப்பட்டு நோயாளிகளை இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகளின் நிலவேம்பு கசாயம், ஓஆர்எஸ் கரைசல் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்தால் அதற்குண்டான சிகிச்சைகள் அளிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.