கோவை : கோவையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக ரூ. 24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
கோவை : கோவையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக ரூ. 24 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு வி கே ரோரு பொரிக்கடை சந்தில் வசிப்பவர் அய்யாசாமி மகன் சக்திவேல். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பீளமேடு பகுதியில் ஒட்டி பிழைத்து வருகிறார். இவரது நண்பர் ஈஸ்வரன் என்பவருக்கு தெரிந்த செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் வசிக்கும் கிருஷ்ணனும் அவரது மகன் சரவணக்குமாரும், சக்திவேலையும் ஈஸ்வரனையும் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் அணுகி தமிழக அரசால் கட்டிக் கொடுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாகவும் அதற்கு பணம் ரூபாய் 1,36,000 கொடுக்கும்படி கூறியுள்ளார்.
மேலும், தாங்கள் ஏற்கனவே இதேபோல் 23 நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாகவும் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் தங்களுக்குத் தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும் விரைவில் வீடு பெற்றுத்தருவதாக நம்பிக்கையுடன் கூறியதால், சக்திவேல் அதை நம்பி மூன்று தவணைகளில் பணம் கொடுத்ததாகவும் கிருஷ்ணனும் அவரது மகன் சரவணக்குமாரும் சொன்னபடி வீடு வாங்கித்தராததால் சக்திவேல் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்ததின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் அவர்களின் உத்தரவுப்படி, காவல் துணை ஆணையர் பெருமாள் அவரது மேற்பார்வையில், உதவி ஆணையர் சவுந்திரராஜன் தலைமையில், காவல் ஆய்வாளர் மல்லிகா, உதவி ஆய்வாளர் ஜமுனா மற்றும் போலீசார், அரசு கட்டித்தரும் குடிசைமாற்று வீடு வாங்கித் தருவதாக 24 நபர்களிடம் ரூபாய் 24 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிய கிருஷ்ணனையும் அவரது மகன் சரவணக்குமாரும் நேற்று கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
கோவை பீளமேடு வி கே ரோரு பொரிக்கடை சந்தில் வசிப்பவர் அய்யாசாமி மகன் சக்திவேல். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பீளமேடு பகுதியில் ஒட்டி பிழைத்து வருகிறார். இவரது நண்பர் ஈஸ்வரன் என்பவருக்கு தெரிந்த செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் வசிக்கும் கிருஷ்ணனும் அவரது மகன் சரவணக்குமாரும், சக்திவேலையும் ஈஸ்வரனையும் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் அணுகி தமிழக அரசால் கட்டிக் கொடுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாகவும் அதற்கு பணம் ரூபாய் 1,36,000 கொடுக்கும்படி கூறியுள்ளார்.
மேலும், தாங்கள் ஏற்கனவே இதேபோல் 23 நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாகவும் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் தங்களுக்குத் தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும் விரைவில் வீடு பெற்றுத்தருவதாக நம்பிக்கையுடன் கூறியதால், சக்திவேல் அதை நம்பி மூன்று தவணைகளில் பணம் கொடுத்ததாகவும் கிருஷ்ணனும் அவரது மகன் சரவணக்குமாரும் சொன்னபடி வீடு வாங்கித்தராததால் சக்திவேல் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்ததின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் அவர்களின் உத்தரவுப்படி, காவல் துணை ஆணையர் பெருமாள் அவரது மேற்பார்வையில், உதவி ஆணையர் சவுந்திரராஜன் தலைமையில், காவல் ஆய்வாளர் மல்லிகா, உதவி ஆய்வாளர் ஜமுனா மற்றும் போலீசார், அரசு கட்டித்தரும் குடிசைமாற்று வீடு வாங்கித் தருவதாக 24 நபர்களிடம் ரூபாய் 24 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிய கிருஷ்ணனையும் அவரது மகன் சரவணக்குமாரும் நேற்று கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைத்தனர்.