நீலகிரி : சென்ற மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கொட்டித் தீர்த்த கன மழையில் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி மின்நிலைய ஊழியர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என அவலாஞ்சி மழை சேதங்களை ஆய்வு செய்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நீலகிரி : சென்ற மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கொட்டித் தீர்த்த கன மழையில் பாதிக்கப்பட்ட அவலாஞ்சி மின்நிலைய ஊழியர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என அவலாஞ்சி மழை சேதங்களை ஆய்வு செய்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் அவலாஞ்சி பகுதியில் பணிபுரிந்து வரும் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கித் தவித்தனர். அதில், காட்டுகுப்பை பகுதியை சேர்ந்த மின்நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி இன்று அவலாஞ்சி மின் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக மின்துறையில் உள்ள 5 ஆயிரம் காலி பணி இடங்கள் விரைவில் நிரப்பபடும் என உறுதியளித்தார்.
மேலும், கன மழையால் பாதிக்கபட்ட அவலாஞ்சி மின் வாரிய ஊழியர்களுக்கு குடியிருப்புகள் ஆம்புலென்ஸ் வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என தெரிவித்த அவர், நீலகிரி மாவட்டம் ஜில்லா ஹல்லா பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட்டில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும், ஆனால் வனத்துறை அனுமதி இன்னும் கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர், காட்டுகுப்பை மின் உற்பத்தி மையத்திற்கு சென்று ஆய்வு நடத்திய பின், மின் ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பாராட்டினார். நிறைவாக புதிதாக நடைபெற்று வரும் மின் உற்பத்தி சுரங்க பாதை பணியையும் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் அவலாஞ்சி பகுதியில் பணிபுரிந்து வரும் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கித் தவித்தனர். அதில், காட்டுகுப்பை பகுதியை சேர்ந்த மின்நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி இன்று அவலாஞ்சி மின் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக மின்துறையில் உள்ள 5 ஆயிரம் காலி பணி இடங்கள் விரைவில் நிரப்பபடும் என உறுதியளித்தார்.
மேலும், கன மழையால் பாதிக்கபட்ட அவலாஞ்சி மின் வாரிய ஊழியர்களுக்கு குடியிருப்புகள் ஆம்புலென்ஸ் வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என தெரிவித்த அவர், நீலகிரி மாவட்டம் ஜில்லா ஹல்லா பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட்டில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும், ஆனால் வனத்துறை அனுமதி இன்னும் கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர், காட்டுகுப்பை மின் உற்பத்தி மையத்திற்கு சென்று ஆய்வு நடத்திய பின், மின் ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பாராட்டினார். நிறைவாக புதிதாக நடைபெற்று வரும் மின் உற்பத்தி சுரங்க பாதை பணியையும் ஆய்வு மேற்கொண்டார்.