அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது : முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கோவை : அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை : அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை சாய்பாபாகாலணி பகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜக சார்பில் அக்டோபர் 2 முதல் மாதம் முழுவதும் பாதயாத்திரை நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும், இந்த பாதயாத்திரை உலகில் அதிக நபர்களைக் கொண்டு அதிக தூரம் கடந்த பாதயாத்திரையாக இருக்கும் எனவும் அவர் கூறினார். இடைத்தேர்தல்களில் பாஜக பிரச்சாரம் செய்வது குறித்த கேள்விக்கு, அகில இந்திய தலைமை முடிவு செய்யும் எனவும், தற்போது பாதயாத்திரையில் கவனம் செலுத்தி வருகிறோம் எனவும் பதிலளித்தார். தங்களைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது எனவும், கூட்டணி குறித்து துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளிக்காது பற்றி அதிமுக தான் பதில் சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மாநில தலைமை தான் முடிவெடுக்கும் எனவும், தான் கருத்து சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார். மேலும் தான் விசாரித்தவரை புதுச்சேரி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறுமென்பதே இப்போது உள்ள சூழ்நிலை என அவர் தெரிவித்தார்.

கீழடி அகழ்வாய்வு மூலம் வரலாறு, தமிழகத்தில் இருந்து துவங்கும் என்பது மகிழ்ச்சி எனவும், ஆனால் அது திமுகவில் இருந்து துவங்கி விடக்கூடாது எனவும் கூறிய அவர், அப்படி நடந்தால் காலகாலத்திற்கும் தலைகுனிவாக மாறி விடுமென தெரிவித்தார். மோடி தமிழின் மீதும், தமிழர் மீதும் பற்று கொண்டவர் எனவும், கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட எந்த நாகரிகமாக இருந்தாலும் முழுமையாக ஆய்வு முடிவு வெளிவர மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்கிறது என்றால், மாநில அளவில் நடந்த தேர்வுகளில் எவ்வளவு தவறுகள் நடந்திருக்கும் என கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...