திருப்பூர் : கட்டுமான தொழிலாளர்களின் சலுகைகளை அமல்படுத்தக்கோரி திருப்பூரில் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : கட்டுமான தொழிலாளர்களின் சலுகைகளை அமல்படுத்தக்கோரி திருப்பூரில் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான தொழிலாளர்களின் சலுகைகளை தொழிலாளர் நலவாரியம் முற்றிலுமாக பறிப்பதாகவும், 40,000 கோடி சலுகைகளை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தொழிலாளர் நலத் துறை முற்றிலுமாக அபகரிக்க முயற்சி செய்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.

தொழிலாளர் நல வாரியத்தின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு முறையான பலன்களை வழங்க கோரியும் ஏஐடியுசி கட்டிட கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.