கோவையில் 445 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் ; உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி

கோவை : கோவையில் வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த 445 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை : கோவையில் வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த 445 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவின் பேரில் தொடர்ந்து உணவுப் பொருட்கள் கலப்படம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக கலப்பட டீத்தூள் தொடர்பாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், நேற்று போத்தனூர் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் காமராஜ் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், அப்பகுதியில் இருந்த டீ கடைக்கு டீத்தூள் விற்பனை செய்து வந்தார்.

அதைப் பார்த்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டீத்தூள் பாக்கெட்டில் முறையான பதிவுகள் ஏதும் குறிப்பிடாததை கண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அது கலப்பட டீத்தூள் என தெரியவந்தது.

உடனடியாக அவர் கையில் இருந்த சுமார் 12 கிலோ கலப்பட டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையையடுத்து டீ தூள் விற்பனை செய்தவரின் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் அவரின் வீட்டில் இருந்த 445 கிலோ அளவிலான கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த டீ தூள் விற்பனை செய்த நபர் கணபதி பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன்(45) என தெரியவந்தது. இவர், டீ நிறம் அதிகமாக இருக்க கலர் கலந்து, வீட்டிலேயே டீத்தூளை தயாரித்து போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட டீத்தூளை சப்ளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...