அமெரிக்கா விசா பெற போலி ஆவணம் தயாரித்த சம்பவம் ; தனியார் பாஸ்போர்ட் ஏஜென்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் கைது

கோவை : அமெரிக்கா விசா பெற போலி ஆவணம் தயாரித்து கொடுத்த தனியார் பாஸ்போர்ட் ஏஜென்ட் நிறுவனத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை : அமெரிக்கா விசா பெற போலி ஆவணம் தயாரித்து கொடுத்த தனியார் பாஸ்போர்ட் ஏஜென்ட் நிறுவனத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதரக உதவி மண்டல பாதுகாப்பு அதிகாரி ஷேன் பிரவுன் கடந்த 20ஆம் தேதி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார். 




அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது ;-

கோவை ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள (THE ALBATROSS) என்ற நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பாஸ்போர்ட் விசா பெற்றுத்தரும் பணிகளை செய்து வருகிறது. 

அதில் கலைமணி, சதீஷ்குமார் ஆகியோரிடம் இந்த நிறுவனம் அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி முன் தொகை பெற்றுள்ளது.

அதேபோல வாடிக்கையாளர்களை அமெரிக்கா அனுப்ப விசா பெறுவதற்காக வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்களை இந்நிறுவனம் தயார் செய்துள்ளது.

இதில் தங்களது சென்னை அமெரிக்கா தூதரகம் ஆவணங்கள் அனைத்தும் போலி என கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது.

ஆகவே அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் நிவீஷ் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, அந்நிறுவனத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்படத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...