நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னுார் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் சாதிக் இவரது மகன் சாகின் (5) இவர் பெட்போர்டு பகுதியில் இயங்கி வரும் கிங்ஸ் கிட்ஸ் பிரைமரி அண்ட் நர்சரி என்ற தனியார் பள்ளியில் UKG படித்து வருகிறார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னுார் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் சாதிக் இவரது மகன் சாகின் (5) இவர் பெட்போர்டு பகுதியில் இயங்கி வரும் கிங்ஸ் கிட்ஸ் பிரைமரி அண்ட் நர்சரி என்ற தனியார் பள்ளியில் UKG படித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அப்பள்ளியின் வகுப்பாசிரியர் வெண்டி அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் பென்சில்களை வழங்கியுள்ளார். இதனை உடைக்காமல் திருப்ப கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆனால், சாகினுக்கு காெடுத்த பென்சில் ஏற்கனவே உடைந்துள்ளதாக சிறுவன் வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார்.
இதனால் வகுப்பாசிரியர் வெண்டி அச்சிறுவனை கன்னத்தில் அடித்துள்ளார். இதில் மாணவன் காதில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. பின்பு, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் பள்ளியில் நடந்ததை சொல்லி காது வலிப்பதாக கூறியுள்ளான், உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சையாக உதகை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பின்பு, சிறுவன் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான்.
இது குறித்து மேல் குன்னுார் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாக தரப்பு வகுப்பாசிரியர் வெண்டியை பள்ளியில் இருந்து தற்காலிக இடை நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில், இன்று அப்பள்ளியின் வகுப்பாசிரியர் வெண்டி அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் பென்சில்களை வழங்கியுள்ளார். இதனை உடைக்காமல் திருப்ப கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆனால், சாகினுக்கு காெடுத்த பென்சில் ஏற்கனவே உடைந்துள்ளதாக சிறுவன் வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார்.
இதனால் வகுப்பாசிரியர் வெண்டி அச்சிறுவனை கன்னத்தில் அடித்துள்ளார். இதில் மாணவன் காதில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. பின்பு, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் பள்ளியில் நடந்ததை சொல்லி காது வலிப்பதாக கூறியுள்ளான், உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சையாக உதகை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பின்பு, சிறுவன் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான்.
இது குறித்து மேல் குன்னுார் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாக தரப்பு வகுப்பாசிரியர் வெண்டியை பள்ளியில் இருந்து தற்காலிக இடை நீக்கம் செய்துள்ளது.