நீட் பயிற்சி மையம் மூலம் பல இலட்ச ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

கோவை : கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஏக்ஸண்ட் அகாடமி என்ற நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.


கோவை : கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஏக்ஸண்ட் அகாடமி என்ற நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. 

முறையாக வகுப்புகள் நடத்தாமல் பல இலட்ச ரூபாய் மோசடி செய்ததாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். 

சம்பந்தப்பட்ட நீட் பயிற்சி மையத்தில் 15 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு மாணவ, மாணவிகளிடம் ரூபாய் 55 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களாக இந்த கோச்சிங் செண்டர் அடிக்கடி விடுமுறை விடுவதும், முறையாக மாணவ, மாணவிகளுக்கு கோச்சிங் கொடுப்பதும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு இந்த கோச்சிங் செண்டரில் பயின்ற மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்ததால், அடுத்தாண்டு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் நீட் பயிற்சி மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, எனவும் மாணவர்கள் தெரிவித்தனர். 

மேலும், அந்நிறுவன பொது மேலாளர் முகமது சதாம் உசேன் மற்றும் கோவை கிளை மேலாளர் ராஜேஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...