திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பேருந்து, குண்டடம் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது, திருப்பூரில் இருந்து கம்பம் நோக்கி செல்லும் அரசு பேருந்தும் வந்த நிலையில், கல்லூரி பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவால் ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பேருந்து, குண்டடம் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது, திருப்பூரில் இருந்து கம்பம் நோக்கி செல்லும் அரசு பேருந்தும் வந்த நிலையில், கல்லூரி பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவால் ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, அவ்வழியே வந்த அரசு பேருந்தானது, கல்லூரி பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் கல்லூரி பேருந்தில் இருந்த 24 மாணவிகள் காயமடைந்தனர்.

அவர்களை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிருத்திகா (18) சூரிய பிரியா (19) பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.