யானை தந்தங்களை வியாபாரம் செய்து வந்த நபர் வனத்துறையால் கைது

கோவை : காட்டு யானைகளை தூப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி தந்தங்களை கடத்தி வியாபாரம் செய்து வந்த கடத்தல்காரனை மேட்டுப்பாளையத்தில் வனத்துறையால் கைது செய்யபட்டான்.

கோவை : காட்டு யானைகளை தூப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி தந்தங்களை கடத்தி வியாபாரம் செய்து வந்த கடத்தல்காரனை மேட்டுப்பாளையத்தில் வனத்துறையால் கைது செய்யபட்டான்.

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உள்ள காட்டு யானைகளை ஒரு மர்ம கும்பல் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி தந்தங்களை கடத்தி வந்தது. குறிப்பாக, மேட்டுப்பாளையம், சிறுமுகை, தேனி, கூடலூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த வேட்டை கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி யானைகளை வேட்டையாடி வந்தது. 

மேலும், தமிழகம் மட்டுமின்றி கேரளா காடுகளிலும் அந்த கும்பல் யானைகளை வேட்டையாடி வந்தது. இதனையடுத்து, வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சிறப்பு கவனம் எடுத்து வனத்துறை விசாரனை நடத்தி வந்ததில் தேனி மாவட்டம் வருசநாடு சேர்ந்த சிங்கம் (45), குபேந்திரன் (42) ஆகியோரை கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, விசாரனையில் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பாபு என்கிற செட்டியார் (40) என்பவர் தூன்டுதலின் பேரில் துப்பாக்கியால் யானைகளை வேட்டையாடி தந்தங்களை அவருக்கு விற்றது தெரியவந்தது.



இதையடுத்து முக்கிய குற்றவாளியான பாபுவை நான்கு வருடங்களாக வனத்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அவர் ஏற்கனவே இருந்த வழக்கு ஒன்றிக்காக மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஆஜராகி விட்டு வெளியே வந்த போது பாபுவை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். 

தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் 10 க்கும் மேற்பட்ட யானைகளை வேட்டையாடியதும் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனத்தில் மட்டும் நான்கு யானைகளை துப்பாக்கியால் சுட்டு அதன் தந்தங்களை எடுத்து டெல்லிக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து 7பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்பு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...