திருப்பூர் : திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வந்துள்ளது. அதில், அந்த பெண்ணின் ஆபாச படத்தை வைத்திருப்பதாகவும், ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும், மறுத்தால் இணையதளத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதாக.கூறப்படுகிறது.
திருப்பூர் : திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வந்துள்ளது. அதில், அந்த பெண்ணின் ஆபாச படத்தை வைத்திருப்பதாகவும், ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும், மறுத்தால் இணையதளத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதாக.கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குறுஞ்செய்தி வந்த மொபைல் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் சேலத்தை சேர்ந்த நரேஷ் (27) என்பரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளதாகவும், அந்த திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் முகநூலில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து பணம் பறிப்பதற்காக இது போன்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் அவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குறுஞ்செய்தி வந்த மொபைல் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் சேலத்தை சேர்ந்த நரேஷ் (27) என்பரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளதாகவும், அந்த திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் முகநூலில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து பணம் பறிப்பதற்காக இது போன்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் அவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.