கோவை : உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர்க் கடையில் சிலிண்டர் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீவிபத்து தீயணைப்பு வீரர்கள் முயற்சியால் அணைக்கப்பட்டது.
கோவை : உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர்க் கடையில் சிலிண்டர் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீவிபத்து தீயணைப்பு வீரர்கள் முயற்சியால் அணைக்கப்பட்டது.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்கு மாநகருக்குள் செல்லும் பேருந்துகளும் அதேபோல பொள்ளாச்சி மற்றும் கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் வந்து செல்கின்றன.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர்.
இதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆவின் தேனீர் கடை உட்பட பல்வேறு தேனீர் கடைகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று பேருந்து நிலையத்திலுள்ள முகமது உபைஸ் என்பவருக்கு சொந்தமான தேனீர் கடையில் சிலிண்டர் கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தகவலறிந்த உக்கடம் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 20 நிமிடத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீ விபத்து தொடர்பாக போலீசாரும் தீயணைப்பு துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள டீக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.