கோவை : கருமத்தம்பட்டியில் தமிழக அரசை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாக பூபாலன் என்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யபட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கருமத்தம்பட்டியில் தமிழக அரசை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாக பூபாலன் என்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யபட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னி ஆண்டவர் கோவில் மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகத்துக்கிடமான நபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ரோந்து வந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மேலும் போலீசார் அந்த இளைஞர் பெயர் பூபாலன் (31) என்றும் தமிழக அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் என்றும், அதேபோல ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் 7(1)(a) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal law amendment) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் சூலூர் நீதிபதி வேடியப்பன் வீட்டில் போலீசார் பூபாலனை நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.
முதல் தகவல் அறிக்கையில் கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாததால் பூபாலனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்து விட்டார்.
இதையடுத்து சூலூர் போலீசார் அவரை மீண்டும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னி ஆண்டவர் கோவில் மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகத்துக்கிடமான நபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ரோந்து வந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மேலும் போலீசார் அந்த இளைஞர் பெயர் பூபாலன் (31) என்றும் தமிழக அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் என்றும், அதேபோல ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் 7(1)(a) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal law amendment) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் சூலூர் நீதிபதி வேடியப்பன் வீட்டில் போலீசார் பூபாலனை நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.
முதல் தகவல் அறிக்கையில் கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாததால் பூபாலனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்து விட்டார்.
இதையடுத்து சூலூர் போலீசார் அவரை மீண்டும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.