கோவை : கோவையில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான உளவியல் ரீதியிலான பிரச்சனைகளுக்குத் தீர்வு கூறும் வகையிலான ஆலோசனை மையம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான உளவியல் ரீதியிலான பிரச்சனைகளுக்குத் தீர்வு கூறும் வகையிலான ஆலோசனை மையம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் பேசுகையில், இயந்திர மையமான வாழ்க்கையில் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனைகள் மக்களை மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடுகிறது. குறிப்பாக, குடும்பம் மற்றும் சமூக சார்ந்த பிரச்சனைகளால் மகளிர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில்தான் இந்த உளவியல் கவுன்சலிங் மையம் துவங்கப்பட்டுள்ளது என்றார். தற்போதைய சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.ஆனால் அதே வேளையில், அவர்கள் தங்களின் குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுவதாக தெரிவித்தார்.
சமூகம் மற்றும் குடும்பத்தின் முதுகெலும்பாக விளங்கும் மகளிருக்கு உதவும் வகையில் அவர்களின் மேம்பாட்டுக்கு மன அழுத்தம் தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடனும் உளவியல் நிபுணர் எம்.எஸ்.கே. முகையுதீன் வழிகாட்டுதலின் பேரில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த மையம் தொலைபேசி வாயிலாக உளவியல் ஆலோசனைகளை மகளிருக்கு வழங்க உள்ளது எனவும் தெரிவித்தார்.
தற்கொலை எண்ணம், திருமணம் சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மகளிர் 75300 45670, 7530045671 என்ற அலைபேசி எண்களை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொண்டு, உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை பெறலாம் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் பேசுகையில், இயந்திர மையமான வாழ்க்கையில் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனைகள் மக்களை மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடுகிறது. குறிப்பாக, குடும்பம் மற்றும் சமூக சார்ந்த பிரச்சனைகளால் மகளிர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில்தான் இந்த உளவியல் கவுன்சலிங் மையம் துவங்கப்பட்டுள்ளது என்றார். தற்போதைய சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.ஆனால் அதே வேளையில், அவர்கள் தங்களின் குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுவதாக தெரிவித்தார்.
சமூகம் மற்றும் குடும்பத்தின் முதுகெலும்பாக விளங்கும் மகளிருக்கு உதவும் வகையில் அவர்களின் மேம்பாட்டுக்கு மன அழுத்தம் தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடனும் உளவியல் நிபுணர் எம்.எஸ்.கே. முகையுதீன் வழிகாட்டுதலின் பேரில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த மையம் தொலைபேசி வாயிலாக உளவியல் ஆலோசனைகளை மகளிருக்கு வழங்க உள்ளது எனவும் தெரிவித்தார்.
தற்கொலை எண்ணம், திருமணம் சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மகளிர் 75300 45670, 7530045671 என்ற அலைபேசி எண்களை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொண்டு, உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை பெறலாம் என அவர் தெரிவித்தார்.