ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஆடல் பாடலுடன் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 600கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை : தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் ஃபேஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது.

கோவை : தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் ஃபேஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. 

இதனையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளின் வளர்ச்சி, வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, சுகாதாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேற்கொண்டனர். 



மேலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்னும் நோக்கத்திலும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



அதனைத்தொடர்ந்து 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது ஊட்டச்சத்து பற்றாக்குறை குறித்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடி ஊர்வலமாக சென்றனர்.



மேலும் இந்த நிகழ்ச்சியின்போது சத்துணவு ஊழியர்கள் பெண்கள் கும்மியடித்த படி விழிப்புணர்வு பாடல்களை பாடி நடனம் ஆடியபடியே ஊர்வலமாக சென்றனர். 

இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராம் துரை முருகன் துவக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி வ.ஊ.சி.மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த பேரணியில் 600கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...