சென்னையை போல சிற்றுந்து கோவையிலும் விரைவில் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணபலன்களை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் இன்று வழங்கினர்.


கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணபலன்களை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் இன்று வழங்கினர்.

விழாவில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து கழகம் என்றாலே மக்கள் சேவை செய்யும் துறை. ஓரு நாளைக்கு 1.75 கோடி மக்களை பத்திரமாக ஏற்றி இறக்கி வரும் துறை.

இது குறித்து அவர் பேசியதாவது: 







சேவை துறை என்பதால் வரவுக்கும் செலவிற்கும் இடைவெளி அதிகமாக இருக்கின்றது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான, பணபலன்கள் இந்த ஆட்சியில் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் போக்குவரத்து முதலாளிகளுக்கு இணையாக அரசு போக்குவரத்து சேவையும் இருந்து வருகின்றது. சென்னையை போல சிற்றுந்து கோவையிலும் விரைவில் இயக்கப்பட இருக்கின்றது.

ஜெர்மன் வங்கி மூலமாக 2000 மின்சார பேருத்தும், பி.எஸ்.6 பேருந்து 12 ஆயிரம் பேருந்துகளும் வாங்கப்பட்ட இருக்கின்றன்.

820 மின்சார பேருந்துகள் முதல்கட்டமாக கோவை, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இயக்கப்படும். மேலும், 5844 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருக்கின்றது. தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளும் நவீனபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்: 







சென்னையை போல கோவைக்கும் சிற்றுந்து இயக்க வேண்டும் என கேட்டு இருக்கின்றோம். பேருந்து பாடி கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் சிற்றுந்து இயக்கப்படும் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி கோவைக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. விரைவில் சிற்றுந்து திட்டமும் செயல்படுத்தபடும் என்றார்.



நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய மொட்டார் வாகன சட்டம் மக்களை பாதிக்காத வகையில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அபராதங்கள் குறைக்கப்பட்டு விரைவில் அமல்படுத்தபடும். தீபாவளி பண்டிகையின் போது கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.



நிகழ்ச்சியில், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஓய்வுபெற்ற 793 பணியாளர்களுக்கு ரூபாய் 164.79 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணபலன்களுக்கு 1,093 கோடி ரூபாயினை வழங்கி முதல்வர் இன்று காலை துவக்கி வைத்தார்.

தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கோவை, திருப்பூர் , பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து கூடுலாக கூட்டம் வரும் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் எவ்வளவு பேருந்துகள் என்பது இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...