கோவையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி ; சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 200 நாட்கள் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையாளர் உத்தரவு

கோவை : ரத்தினபுரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதையடுத்து, குற்ற விசாரணை பிரிவு சட்டம் 107 பிரிவின் படி 200 நாட்கள் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை : ரத்தினபுரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதையடுத்து, குற்ற விசாரணை பிரிவு சட்டம் 107 பிரிவின் படி 200 நாட்கள் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கவுதம் என்ற கருப்பு கவுதம்(25). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி குற்ற விசாரணை முறைச் சட்டம் 107 பிரிவின் படி, மாநகர காவல் துணை ஆணையரும், எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்ட்ரேட்டுமான பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அதிலிருந்து ஓராண்டுக்கு எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என அவரிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி பெறப்பட்டது. ஆனால், கடந்த 5-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கவுதம் ரத்தினபுரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

இதை தொடர்ந்து சிறையில் இருந்து கடந்த 17-ம் தேதி கவுதம் வெளியே வந்தார். 

ஓராண்டுக்கு எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியை மீறியதால், ரத்தினபுரி காவல்துறையினர், கவுதமை நேற்று மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

உறுதிமொழியை மீறியதால், நேற்றிலிருந்து வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வரை 200 நாட்கள் கவுதமை சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து கவுதம் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க குற்ற விசாரணை முறைச் சட்டம் 107 பிரிவை பயன்படுத்தி குற்றவாளிகள் தொடர்ந்து மாநகர காவல் துறையால் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...