கோவை : வீடுகளில் ரசாயனத்தைத் தவிர்த்து, இயற்கை முறையில் சுத்தப்படுத்தலுக்கான கருத்தரங்கம் சிறுதுளி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கோவை : வீடுகளில் ரசாயனத்தைத் தவிர்த்து, இயற்கை முறையில் சுத்தப்படுத்தலுக்கான கருத்தரங்கம் சிறுதுளி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நீர் நிலைகள் பாதுகாப்பது மட்டுமின்றி, நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுகளையும் சிறுதுளி அமைப்பு செயல்படுத்தி வருகின்றது. கடந்த செப்.,18ம் தேதி, வீடுகளில் இயற்கை முறையில் சுத்தப்படுத்தலுக்கான கருத்தரங்கம் சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சிறுதுளியின் உறுப்பினர் சங்கீதா சுபாஷ் பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், நீர் சேமிப்பு, சுத்தமான நீர் நிலைகள் பாதுகாப்பது ஒவ்வொரு தனி நபரின் கடமை. தொழிற்சாலைகளின் கழிவுகளால் மட்டும் நமது நீர்நிலைகள் மாசடைவதில்லை. ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களாலும் மாசடைந்து நுரை ததும்பக் காட்சியளிக்கின்றன. தினசரி வீடுகளில் குளிக்க ஷாம்பூ, பாத்திரம் கழுவ, தரை மற்றும் கழிப்பறைகள் சுத்தப்படுத்த என பல விதமான செயற்கைத் திரவங்களை பல நூறு ரூபாய்களைக் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றோம். இதில் சுமார் 52 ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் அனைத்தும் வீடுகளில் இருந்து கழிவாக வெளியேறி நீர்நிலைகளில் கலக்கின்றன. சூழல் மாசுபாடும் ஏற்படுகின்றது.
ஆனால் நம் முன்னோர்கள் வீடுகளிலேயே இருந்த இயற்கைப் பொருட்களான சாம்பல், எலுமிச்சை, சீகக்காய், ஆகியவற்றைச் சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தினர். இதனால் அவர்களுக்கும், சூழலுக்கும் தீங்கில்லாமல் இருந்தது. மேலும் வீட்டில் பயன்படுத்திய தண்ணீர் மரங்கள், செடிகளுக்குப் போகுமாறு வடிவமைத்திருந்தனர். இதனால் நிலத்தடி நீரும் உயர்ந்தது. நமது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வீட்டு சுத்திகரிப்புகளைத் தயாரித்து பயன்படுத்த முடியும்.
ஹேண்ட்வாஷுக்கு பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு சாத்துக்குடி பழத்தோல்களை காயவைத்து, பொடி செய்து திரவம் தயாரிக்க முடியும். இந்த திரவம் வீட்டினை சுத்தப்படுத்த, ஹேண்ட்வாஷாக என பலவகைகளில் பயன்படுத்தலாம். கடலைமாவு, பயத்தம்பருப்பின் மூலம் துணி துவைக்கும் திரவங்களைத் தயாரிக்க முடியும். நுரை வந்தால் தான் பிடிக்கும் என்றால் பூச்சிக்கொட்டையில் உள்ள கொட்டையினை அரைத்து சேர்த்தால் நுரை ததும்ப துணிகளை, வீடுகளை சுத்தப்படுத்த முடியும். இயற்கை வழியில் வாழ்ந்தால் இந்தத் தலைமுறையினர் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினருக்கும் இந்த இயற்கை வளங்களை பாதிப்பில்லாமல் கொடுக்க முடியும் என்று கூறினார்.
சிறுதுளி அமைப்பின் அலுவலகம், கோவையில் உள்ள பல பள்ளிகளில் இயற்கையான முறையிலேயே சுத்தப்படுத்துகின்றனர் என தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சாம்பல் வைத்து பாத்திரம் கழுவும் பொடி, சலவைத் திரவம், பலவகைகளில் பயன்படுத்த உதவும் பயோ என்சைம் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் முறைகளை கற்றுக் கொடுத்தார். சுமார் 45-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தயாரிப்பு முறைகளைக் கற்றுக் கொண்டும், இனி இயற்கைப் பொருட்களைக் கொண்டே வீடுகளை சுத்தப்படுத்துவோம் என்ற உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.


நீர் நிலைகள் பாதுகாப்பது மட்டுமின்றி, நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுகளையும் சிறுதுளி அமைப்பு செயல்படுத்தி வருகின்றது. கடந்த செப்.,18ம் தேதி, வீடுகளில் இயற்கை முறையில் சுத்தப்படுத்தலுக்கான கருத்தரங்கம் சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சிறுதுளியின் உறுப்பினர் சங்கீதா சுபாஷ் பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், நீர் சேமிப்பு, சுத்தமான நீர் நிலைகள் பாதுகாப்பது ஒவ்வொரு தனி நபரின் கடமை. தொழிற்சாலைகளின் கழிவுகளால் மட்டும் நமது நீர்நிலைகள் மாசடைவதில்லை. ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களாலும் மாசடைந்து நுரை ததும்பக் காட்சியளிக்கின்றன. தினசரி வீடுகளில் குளிக்க ஷாம்பூ, பாத்திரம் கழுவ, தரை மற்றும் கழிப்பறைகள் சுத்தப்படுத்த என பல விதமான செயற்கைத் திரவங்களை பல நூறு ரூபாய்களைக் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றோம். இதில் சுமார் 52 ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் அனைத்தும் வீடுகளில் இருந்து கழிவாக வெளியேறி நீர்நிலைகளில் கலக்கின்றன. சூழல் மாசுபாடும் ஏற்படுகின்றது.
ஆனால் நம் முன்னோர்கள் வீடுகளிலேயே இருந்த இயற்கைப் பொருட்களான சாம்பல், எலுமிச்சை, சீகக்காய், ஆகியவற்றைச் சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தினர். இதனால் அவர்களுக்கும், சூழலுக்கும் தீங்கில்லாமல் இருந்தது. மேலும் வீட்டில் பயன்படுத்திய தண்ணீர் மரங்கள், செடிகளுக்குப் போகுமாறு வடிவமைத்திருந்தனர். இதனால் நிலத்தடி நீரும் உயர்ந்தது. நமது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வீட்டு சுத்திகரிப்புகளைத் தயாரித்து பயன்படுத்த முடியும்.
ஹேண்ட்வாஷுக்கு பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு சாத்துக்குடி பழத்தோல்களை காயவைத்து, பொடி செய்து திரவம் தயாரிக்க முடியும். இந்த திரவம் வீட்டினை சுத்தப்படுத்த, ஹேண்ட்வாஷாக என பலவகைகளில் பயன்படுத்தலாம். கடலைமாவு, பயத்தம்பருப்பின் மூலம் துணி துவைக்கும் திரவங்களைத் தயாரிக்க முடியும். நுரை வந்தால் தான் பிடிக்கும் என்றால் பூச்சிக்கொட்டையில் உள்ள கொட்டையினை அரைத்து சேர்த்தால் நுரை ததும்ப துணிகளை, வீடுகளை சுத்தப்படுத்த முடியும். இயற்கை வழியில் வாழ்ந்தால் இந்தத் தலைமுறையினர் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினருக்கும் இந்த இயற்கை வளங்களை பாதிப்பில்லாமல் கொடுக்க முடியும் என்று கூறினார்.
சிறுதுளி அமைப்பின் அலுவலகம், கோவையில் உள்ள பல பள்ளிகளில் இயற்கையான முறையிலேயே சுத்தப்படுத்துகின்றனர் என தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சாம்பல் வைத்து பாத்திரம் கழுவும் பொடி, சலவைத் திரவம், பலவகைகளில் பயன்படுத்த உதவும் பயோ என்சைம் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் முறைகளை கற்றுக் கொடுத்தார். சுமார் 45-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தயாரிப்பு முறைகளைக் கற்றுக் கொண்டும், இனி இயற்கைப் பொருட்களைக் கொண்டே வீடுகளை சுத்தப்படுத்துவோம் என்ற உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.
