கோவை : இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் குப்பை கூடைகளில் குப்பைகளை போடும்படி வலியுறுத்தி, கோவை இரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.
கோவை : இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் குப்பை கூடைகளில் குப்பைகளை போடும்படி வலியுறுத்தி, கோவை இரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.
இரயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதனை முழுமையாக செயல்படுத்த பயணிகளின் முழு ஒத்துழைப்பு அவசியமாகிறது. ஆனால் பயணிகள் பலரும் தற்போதும் இரயில் பெட்டிகளையே குப்பை மேடாக பயன்படுத்தவதை காண முடிகிறது.

இதனை சீர்படுத்தும் வகையில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரயில்வே துறையும் மத்திய அரசும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாடு தோறும் மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக தென்னக இரயில்வேயின் சேலம் மண்டல இரயில்வே மற்றும் அறம் பவுண்டேசன் தொண்டு நிறுவனம் சார்பில் கோவை இரயில் நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் நாடக நிகழ்ச்சிகள் மூலமாகவும் நடனமாடியும், குப்பைகளை முறையாக குப்பை கூடைகளில் போட வேண்டும் என்பதை வலியுறித்தி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, இரயில் நிலையத்தின் நடைமேடைகள், இருப்புப்பாதைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர். இந்நிகழ்ச்சியில், இரயில் நிலைய மேலாளர் ராஜூ, அறம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், லதா சுந்தரம் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதனை முழுமையாக செயல்படுத்த பயணிகளின் முழு ஒத்துழைப்பு அவசியமாகிறது. ஆனால் பயணிகள் பலரும் தற்போதும் இரயில் பெட்டிகளையே குப்பை மேடாக பயன்படுத்தவதை காண முடிகிறது.

இதனை சீர்படுத்தும் வகையில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரயில்வே துறையும் மத்திய அரசும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாடு தோறும் மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக தென்னக இரயில்வேயின் சேலம் மண்டல இரயில்வே மற்றும் அறம் பவுண்டேசன் தொண்டு நிறுவனம் சார்பில் கோவை இரயில் நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் நாடக நிகழ்ச்சிகள் மூலமாகவும் நடனமாடியும், குப்பைகளை முறையாக குப்பை கூடைகளில் போட வேண்டும் என்பதை வலியுறித்தி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, இரயில் நிலையத்தின் நடைமேடைகள், இருப்புப்பாதைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர். இந்நிகழ்ச்சியில், இரயில் நிலைய மேலாளர் ராஜூ, அறம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், லதா சுந்தரம் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
