மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று வளாகத்தில் அதிகாரிகளின் துணையுடன் மரங்களை வெட்டி கடத்திய கும்பல்

கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று வளாகத்தில் இருந்த மரங்களை அதிகாரிகளின் துணையுடன் வெட்டி கடத்திய கும்பல், நகராட்சி ஆணையாளர் அந்த வழியாக ரோந்து சென்ற போது சிக்கியதால் கடத்தலுக்குத் துணையாக இருந்ததாக நகராட்சி ஊழியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.


கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று வளாகத்தில் இருந்த மரங்களை அதிகாரிகளின் துணையுடன் வெட்டி கடத்திய கும்பல், நகராட்சி ஆணையாளர் அந்த வழியாக ரோந்து சென்ற போது சிக்கியதால் கடத்தலுக்குத் துணையாக இருந்ததாக நகராட்சி ஊழியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 33 வார்டு பகுதிக்கும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீரில் எடுக்கப்பட்டு சாமன்ன வாட்டர் ஹவுஸ் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று நிலையம் கடந்த 1941ம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த நீரேற்று நிலையத்தில் பழமையான வேம்பு, அரசன், அசோக மரங்கள் உள்ளன. தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆற்றோர பகுதி என்பதால் இந்த வளாகத்தில் அன்னியர் யாரும் நுழையாமல் இருக்க பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது.

மேலும், இதனை நகராட்சி சூப்பரண்ட் தலைமையில் சிப்ட் வகையில் இரவு பகலாக நகராட்சி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இப்படி இருக்க வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 



மேட்டுப்பாளையம் சாமன்ன நீரேற்று நிலையத்தில், இங்கு நகராட்சி ஊழியராக பணியாற்றி ரங்கராஜ், சில உயர் அதிகாரிகளின் தூண்டுதலால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் திருட்டுத்தனமாக மரம் வெட்டும் கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு இந்த வளாகத்தில் இருந்த வேம்பு, வாகன், மற்றும் பிளவர் மரம் என மூன்று மரங்களை வெட்டி அதனைக் கடத்தியுள்ளனர்.

பல லட்சம் மதிப்புடைய அந்த மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டுகொள்ளாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாறாக வெட்டிய மரங்களை பெரும்பாலும் எடுத்து வியாபாரம் செய்து விட்ட நிலையில், திடீரென அந்த பகுதிக்கு ரோந்து சென்ற நகராட்சி ஆணையாளர் அதனைப் பார்த்து கேட்டுள்ளார். பின்னர், மாறி மாறி மழுப்பிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்வதறியாது நின்றனர்.

இது குறித்து விசாரித்த நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், உடனடியாக அப்போது பணியில் இருந்த நகராட்சி ஊழியர் ரங்கராஜை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டுமே தனியாகச் செய்யக் கூடிய நிகழ்வாக இது இருக்க வாய்ப்பில்லை எனவே, மரம் வெட்டப்பட்டுக் கடத்த உறுதுணையாக இருந்த உயர் அதிகாரிகள் யார் யார் என கண்டறிந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...