நீலகிரியில் ஸ்ட்ராபெரி பழங்களை பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்

நீலகிரி : கோத்தகிரியில் பெரும்பாலான விவசாயிகள் கொய் மலர் சாகுபடியைக் கைவிட்ட நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட குடில்களில் ஸ்ட்ராபெரி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி : கோத்தகிரியில் பெரும்பாலான விவசாயிகள் கொய் மலர் சாகுபடியைக் கைவிட்ட நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட குடில்களில் ஸ்ட்ராபெரி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு தேயிலை தொழிலே மிகவும் பிரதானமாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகப் பச்சைத் தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து. விவசாயிகளில் பலர் கொய் மலர் சாகுபடி செய்யக் குடில்களை அமைத்து அதில் கொய்மலர், பீன்ஸ், மேரக்காய் போன்ற மலைகாய்கறிகளை சாகுபடி செய்யத் தொடங்கினர். இதில் மலர்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. காய்கறிகள் உள்ளூர் சந்தையில் விற்கப்பட்டன. இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது.

காலப் போக்கில் கொய் மலர் சாகுபடியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே பெரும்பாலான விவசாயிகள் கொய் மலர் சாகுபடியைக் கைவிட்டு, அதற்காக பெரும் முதலீட்டில் அமைக்கப்பட்ட குடில்களையும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர். ஆனால் ஒருசில விவசாயிகள் அதே குடில்களில் ஸ்டாபெரி பழங்களைச் சாகுபடி செய்து அதன் மூலம் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.



சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி, நன்கு பராமரித்து வந்தால் 3 மாதத்துக்குள் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்குத் தயாராகி விடும். பழங்களை ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம்



இந்த செடிகளில் இருந்து ஆண்டு முழுவதும் பழங்களை அறுவடை செய்ய முடியும் என்பதால் மேலும் ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை தரத்துக்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பல விவசாயிகள் தற்போது ஸ்ட்ராபெரி பழ விவசாயத்திற்கு மாறியுள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...