உதகை நெடுஞ்சாலைத்துறை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் ; அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் நெடுஞ்சாலைத் துறை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் இன்று மாலை திடீரென அகற்றும் பணியில் ஈடுபட்டதால் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் நெடுஞ்சாலைத் துறை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் இன்று மாலை திடீரென அகற்றும் பணியில் ஈடுபட்டதால் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், குறிப்பாக உதகையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரத்தில் அதிக அளவில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.



சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளை இன்று மாலை அகற்றினர்.

அரசு அதிகாரிகள் கடைகளை அகற்றும் முன், கடையின் உரிமையாளர்கள் சரியான முறையில் ரசீது வைத்துள்ளதாகவும் கடையை ஏன் எடுக்கிறீர்கள் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். நெடுஞ்சாலையில் நடைபாதையில் கடைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்த கடைகளை அப்புறப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் போது கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் சுமார் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் கடைகளை அகற்றும் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...