திருப்பூர் : உறவினர்கள் சொத்தை அபகரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
திருப்பூர் : உறவினர்கள் சொத்தை அபகரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

திருப்பூர் எம்.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிங்கப்பெருமாள். அவருக்கு மதுரை எஸ்.கல்லிப்பட்டி பகுதியில் 2 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. இதனை தனது உறவினர்கள் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவர்களிடம் இருந்து தனது சொத்தை காப்பாற்றித் தருவதோடு உயிர் பாதுகாப்பும் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்,

திடீரென தன் கையில் கொண்டு வந்திருந்த எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
