கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

கோவை : கோவை பிள்ளையார்புரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோவை : கோவை பிள்ளையார்புரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோவை மதுக்கரை சாலையில் உள்ள பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் முரளி(26). இந்த இளைஞர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அப்போது திடீரென வீட்டிற்கு வந்த பெண்ணின் தாய் முரளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பெண்ணின் வீட்டின் அருகே வசித்து வரும் கண்ணன் என்பவர் முரளியை தாக்கி பிடிக்க முற்பட்டுள்ளார்.

அப்போது, முரளி தன்னிடமிருந்த கூர்மையான ஆயுதத்தால் கண்ணனை தாக்கியுள்ளார். இதில் கண்ணன் நிலைகுலைந்து போக முரளி தப்பியோடினார். இதையடுத்து அப்பகுதி மக்கள், முரளியை பிடிக்கத் துரத்தியபோது முரளி கால் தடுக்கி கீழே விழுந்தார். இதையடுத்து முரளியை பிடித்த பொதுமக்கள் போத்தனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

பின்னர், தகவலறிந்து வந்த போத்தனூர் போலீசார், படுகாயமடைந்த கண்ணனை மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்ட நிலையில். முரளியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புலியகுளம் பகுதியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...