கோவை : மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இராணுவம், மருத்துவம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கே.ஜி.பவுண்டேஷன் சார்பில் டயனமிக் இந்தியன் ஆப் மில்லினியம் என்ற விருது வழங்கப்பட்டது.
கோவை : மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இராணுவம், மருத்துவம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கே.ஜி.பவுண்டேஷன் சார்பில் டயனமிக் இந்தியன் ஆப் மில்லினியம் என்ற விருது வழங்கப்பட்டது.

கோவை கே.ஜி.பவுண்டேஷன் சார்பாக மருத்துவத் துறை, நாட்டின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஒன்பது பேரை தேர்வு செய்து டயனமிக் இந்தியன் ஆப் தி மில்லினேயம் எனும் விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். வளாகத்தில் நடைபெற்றது. கே.ஜி.பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில், வராஹி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ வராஹி குருஜி மற்றும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இதில் டயனமிக் இந்தியன் ஆப் தீ மில்லினேயம் விருது பால் தினகரன், இந்திய புள்ளியியல் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ராஜகோபால், மிருதுபாஷினி, மாதவன் அழகர்சாமி, எஸ்.கணபதி ரமணன் ,ஜி.மனோஜ் மத்வானி, பி.துர்கா பிரசாத் ரெட்டி, அல்போன்ஸ் மரியதாஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 81 மருத்துவர்களுக்கு "டாக்டர் ஆப் எக்ஸ்லென்ஸ்" விருதினையும், நாட்டின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை, விரைவு அதிரடிப்படை, எல்லை பாதுகாப்பு படை, கப்பற்படை, இராணுவம், விமானப்படை ஆகியவற்றில் பணி செய்வோர்க்கு "இந்தியாவின் நாட்டுப்பற்று மிக்க ஹீரோக்கள்" விருதுகளையும் டாக்டர் பக்தவத்சலம் வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் கே.ஜி.ஐஸ்.எல்.தலைவர் அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.