உதகை அருகே கேத்தி பாலாடா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
உதகை அருகே கேத்தி பாலாடா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

கேத்தி பாலாடா பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நடை பாதை, வசதி மயான வசதி, தண்ணீர் வசதி, என அடிப்படைத் தேவைகள் எதுவும் சரியான முறையில் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர் .
பின்னர், மாவட்ட ஆட்சியரை பார்க்க ஊர் பொதுமக்கள் சார்பாக 3 பேர் சந்திக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்த போது, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆட்சியரை சந்தித்தே ஆகவேண்டும் என காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
மேலும், தங்கள் குடியிருக்கும் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களை தூக்கிச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது எனவும் அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு கூட சரியான நடைபாதை இல்லை தற்பொழுது தங்களுக்குத் தேவையான முக்கியமான ஒன்று இது என தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் அவர்கள், உங்கள் பகுதியில் அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முதற்கட்டமாக நடைபாதையை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியரை ஊர் சார்பாக சந்தித்த நபர்கள், சரியான தீர்வு தங்களுக்கு கிடைக்கவில்லை எனில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

கேத்தி பாலாடா பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நடை பாதை, வசதி மயான வசதி, தண்ணீர் வசதி, என அடிப்படைத் தேவைகள் எதுவும் சரியான முறையில் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர் .
பின்னர், மாவட்ட ஆட்சியரை பார்க்க ஊர் பொதுமக்கள் சார்பாக 3 பேர் சந்திக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்த போது, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆட்சியரை சந்தித்தே ஆகவேண்டும் என காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
மேலும், தங்கள் குடியிருக்கும் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களை தூக்கிச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது எனவும் அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு கூட சரியான நடைபாதை இல்லை தற்பொழுது தங்களுக்குத் தேவையான முக்கியமான ஒன்று இது என தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் அவர்கள், உங்கள் பகுதியில் அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முதற்கட்டமாக நடைபாதையை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியரை ஊர் சார்பாக சந்தித்த நபர்கள், சரியான தீர்வு தங்களுக்கு கிடைக்கவில்லை எனில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.