கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திராவிட இயக்கத்தின் தலைவராக போற்றப்படும் பேரறிஞர்அண்ணாவின் 111வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடபட்டது.
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திராவிட இயக்கத்தின் தலைவராக போற்றப்படும் பேரறிஞர்அண்ணாவின் 111வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடபட்டது.

இந்த விழாவை முன்னிட்டு அ.தி.மு.க நகர செயலாளர் வான்மதி சேட் தலைமையில் திரண்ட அக்கட்சியின் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், 10 அடி உயர மாலையுடன் ஊட்டி சாலையில் இருந்து அண்ணா சிலை அமைந்துள்ள சிக்ஸ் கார்ணர் வரை ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும், அங்கு கூடியிருந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர், ஓ.கே சின்னராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர், நாசர் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை முன்னிட்டு அ.தி.மு.க நகர செயலாளர் வான்மதி சேட் தலைமையில் திரண்ட அக்கட்சியின் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், 10 அடி உயர மாலையுடன் ஊட்டி சாலையில் இருந்து அண்ணா சிலை அமைந்துள்ள சிக்ஸ் கார்ணர் வரை ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும், அங்கு கூடியிருந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர், ஓ.கே சின்னராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர், நாசர் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.