கொள்ளையடிக்க சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரத்தில் டிவியை உடைத்த திருடன்

திருப்பூர் : திருப்பூரில் அடுத்ததடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துவிட்டு, நகை மற்றும் பணமில்லாத வீட்டின் டிவியை எடுத்து வந்து ரோட்டில் எறிந்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் அடுத்ததடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துவிட்டு, நகை மற்றும் பணமில்லாத வீட்டின் டிவியை எடுத்து வந்து ரோட்டில் எறிந்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் போயம்பாளையம், வடிவேல் நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு அடுத்ததடுத்த வீடுகளிலும் திருட முயற்சித்துள்ளார்.



ஆனால் மற்ற வீடுகளில் பணம் நகை எதுவுமில்லாதததால், ஆத்திரத்தில் 40 ஆயிரம் மதிப்பிலான டிவியை எடுத்து வந்து ரோட்டில் வீசி சென்றுள்ளான் அந்த திருடன். முகத்தை துணியால் மறைத்து வந்த அந்த மர்ம நபர், அங்கிருந்த விளக்குகளை அணைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. 

ஒரு வீட்டில் திருடும் முன் மற்ற வீடுகளின் கதவுகளை வெளியில் தாழிட்டு திருட சென்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...