நீலகிரி : நீலகிரியில், முதல் முறையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
நீலகிரி : நீலகிரியில், முதல் முறையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
இதன்பேரில், 'எச்சில் இல்லாத சுகாதாரமான நீலகிரி' என்ற தலைப்பில், குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி வணிகவியல் துறை மாணவியர் சார்பில், தெருமுனை பிரச்சாரம் இன்று நடந்தது.
முன்னதாக, குன்னுார் சிம்ஸ் பூங்கா, பெட்போர்டு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முன்னாள் தமிழ் துறை இணை பேராசிரியை சுஜாதா தலைமை வகித்து பேசினார்.
'பொது இடங்களிலும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் எச்சில் துப்ப கூடாது; மீறி துப்பினால், அபராதம் கட்ட நேரிடும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்பேரில், 'எச்சில் இல்லாத சுகாதாரமான நீலகிரி' என்ற தலைப்பில், குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி வணிகவியல் துறை மாணவியர் சார்பில், தெருமுனை பிரச்சாரம் இன்று நடந்தது.
முன்னதாக, குன்னுார் சிம்ஸ் பூங்கா, பெட்போர்டு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முன்னாள் தமிழ் துறை இணை பேராசிரியை சுஜாதா தலைமை வகித்து பேசினார்.
'பொது இடங்களிலும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் எச்சில் துப்ப கூடாது; மீறி துப்பினால், அபராதம் கட்ட நேரிடும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.