கோவை : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதியார் புரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாடசாமி மற்றும் தமிழரசி, இவர்களது வீடு அடுத்தடுத்து அருகாமையில் இருந்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள இந்த ஜோடிகளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கோவை : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதியார் புரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாடசாமி மற்றும் தமிழரசி, இவர்களது வீடு அடுத்தடுத்து அருகாமையில் இருந்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள இந்த ஜோடிகளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை வீட்டில் உள்ளவர்கள் தெரிந்து கண்டித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி இந்த கள்ளக்காதல் ஜோடி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் செயல்படும் தனியார் நூற்பாலையில் பணிக்கு சேர்ந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு நூற்பாலை வளாகத்திலேயே தனியாக வசிக்க அறையும் ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

இந்நிலையில் பணியில் சேர்ந்து மூன்று தினங்கள் ஆகிய நிலையில் இன்று பணிக்கு வருவதாக கூறிய இந்த ஜோடி பணிக்கு செல்லவில்லை என்பதால், நூற்பாலையை சேர்ந்தவர்கள் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, மாடசாமி மற்றும் தமிரசி இருவரும் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.