நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென்னிந்தியா தோட்ட அதிபர்களின் 126வது மாநாடு நடைபெற்றது. இதில் தரமான தேயிலை தூள் தயாரித்த நிறுவனத்திற்கு தங்க இலை விருது வழங்கி தனியார் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென்னிந்தியா தோட்ட அதிபர்களின் 126வது மாநாடு நடைபெற்றது. இதில் தரமான தேயிலை தூள் தயாரித்த நிறுவனத்திற்கு தங்க இலை விருது வழங்கி தனியார் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
குன்னூரில் தென்னிந்தியா தோட்ட அதிபர்களின் 126வது இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு நாளான இன்று குன்னூர் உபாசி அரங்கில் தரமான தேயிலை தூள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு தங்க இலை விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் தரமான தேயிலை தூள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு தேசிய நித்திய அயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் விருதுகளை வழங்கினார்.

பின்னர், விழாவில் பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கும் தேயிலை தூள் 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் வெளிநாடுகளில் அதிக வகையான தேயிலைத்தூள் ரகங்கள் உள்ளதாகவும் இந்தியாவில் 35 வகையான தேயிலை தூள் ரகங்கள் உள்ளன என கூறினார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தயாரித்த தரமான தேயிலை தூள் தொழிற்சாலைகளுக்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குன்னூரில் தென்னிந்தியா தோட்ட அதிபர்களின் 126வது இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு நாளான இன்று குன்னூர் உபாசி அரங்கில் தரமான தேயிலை தூள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு தங்க இலை விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் தரமான தேயிலை தூள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு தேசிய நித்திய அயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் விருதுகளை வழங்கினார்.

பின்னர், விழாவில் பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கும் தேயிலை தூள் 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் வெளிநாடுகளில் அதிக வகையான தேயிலைத்தூள் ரகங்கள் உள்ளதாகவும் இந்தியாவில் 35 வகையான தேயிலை தூள் ரகங்கள் உள்ளன என கூறினார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தயாரித்த தரமான தேயிலை தூள் தொழிற்சாலைகளுக்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.