கோவை : கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார்.
கோவை : கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார்.
திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் இளைஞரணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்கையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ தலைமையிலும், புலியகுளம் பெரியார் சிலை அருகே மாவட்ட அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையிலும் நடைபெற்ற முகாம்களை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்திரவின்பேரில் தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதாகவும் இந்த முகாம் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை முகாமில் சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், ஆவாரம் பாளையம் பேருந்து நிலையம் அருகிலும், கணபதி பகுதியிலும், வடவள்ளி பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம் உள்ளிட்ட 6 இடங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் இளைஞரணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்கையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ தலைமையிலும், புலியகுளம் பெரியார் சிலை அருகே மாவட்ட அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையிலும் நடைபெற்ற முகாம்களை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்திரவின்பேரில் தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் நடைபெறுவதாகவும் இந்த முகாம் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை முகாமில் சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், ஆவாரம் பாளையம் பேருந்து நிலையம் அருகிலும், கணபதி பகுதியிலும், வடவள்ளி பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம் உள்ளிட்ட 6 இடங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.