திருப்பூரில் கந்துவட்டி கும்பல் கொலை மிரட்டல்; சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி ஆதாரங்களுடன் பெண் காவல் ஆணையரிடம் புகார்

திருப்பூர் : திருப்பூரில் 12 லட்சம் கடன் வாங்கிய பெண்ணிடம் 16 லட்சம் ரூபாய் வரை வட்டி கட்டிய பின்பும், மீண்டும் 12 லட்சம் பணம் கேட்டு கந்துவட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாக, பெண் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி ஆதாரங்களை கொண்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

திருப்பூர் : திருப்பூரில் 12 லட்சம் கடன் வாங்கிய பெண்ணிடம் 16 லட்சம் ரூபாய் வரை வட்டி கட்டிய பின்பும், மீண்டும் 12 லட்சம் பணம் கேட்டு கந்துவட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாக, பெண் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி ஆதாரங்களை கொண்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 



திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்தவர் நவீன் சங்கர் மற்றும் அவர் மனைவி சுபத்ரா, இருவரும் பின்னலாடை தொழில் சார்ந்த தையலகம் வைத்து கடை நடத்தி வரும் நிலையில், கடந்த வருடம் அக்ஷயா பைனான்ஸ் வேலுச்சாமியிடம் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரை, வட்டி மட்டும் 16 லட்சம் ரூபாய் கட்டிய நிலையில், மீண்டும் அசல் தொகையான 12 லட்சம் ரூபாய் கொடுத்தாக வேண்டும், என்று சுபத்ரா மற்றும் நவீன் சங்கரை தொடர்ந்து அந்த கந்து வட்டியினர் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். 



மேலும், சுபத்ரா நடத்தி வரும் தையலகம் சென்று அந்த கந்து வட்டி பைனான்சியர் வேலுச்சாமி கீழ்தரமான வார்த்தைகளால் பேசி வருவதாகவும், ஒரு நாளில் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கும் கந்துவட்டி கும்பலிடமிருந்து பாதுகாப்பு வழக்க கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்.

அந்த மனுவுடன், அவர்கள் தன்னை மிரட்டிய சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலை பேசியில் பேசிய ஆதாரங்களை, காவல் ஆணையரிடம் ஒப்படைத்தார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...