கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் இன்று துவக்கி வைத்தார்.
கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் இன்று துவக்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அமைச்சர் காமராஜ்:
சுமை தூக்கும் தொழிலாளர்களின் சுமையை குறைக்கும் வகையில் முதற்கட்டமாக 140 கிடங்குகளில் தானியாங்கி சுமை தூக்கும் இயந்திரங்கள் 60 நாட்களில் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே கார்டு என்பது எல்லாம் யார் வேண்டுமானாலும் என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம் எனவும், தமிழகத்தில் அதற்கு பெயர் பொதுவிநியோக திட்டம் தான், எனவும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
மேலும், பொது விநியோக திட்டத்தில் எந்த மாறுதலும் கிடையாது எனவும் அத்திட்டத்திற்கு எந்த சிக்கலும் இல்லாமல் அமல்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.
மண்ணெண்ணெய் பற்றாக்குறையை தவிர்க்க கூடுதலாக ஒதுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றவர், மண்ணெண்ணெய் தேவைகளை பொறுத்து பகிர்ந்து வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அமைச்சர் காமராஜ்:
சுமை தூக்கும் தொழிலாளர்களின் சுமையை குறைக்கும் வகையில் முதற்கட்டமாக 140 கிடங்குகளில் தானியாங்கி சுமை தூக்கும் இயந்திரங்கள் 60 நாட்களில் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே கார்டு என்பது எல்லாம் யார் வேண்டுமானாலும் என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம் எனவும், தமிழகத்தில் அதற்கு பெயர் பொதுவிநியோக திட்டம் தான், எனவும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
மேலும், பொது விநியோக திட்டத்தில் எந்த மாறுதலும் கிடையாது எனவும் அத்திட்டத்திற்கு எந்த சிக்கலும் இல்லாமல் அமல்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.
மண்ணெண்ணெய் பற்றாக்குறையை தவிர்க்க கூடுதலாக ஒதுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றவர், மண்ணெண்ணெய் தேவைகளை பொறுத்து பகிர்ந்து வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும் எனவும் அவர் கூறினார்.