இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்ட பெரியாரிய இயக்கத்தினர் கைது

திருப்பூர் : "விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பொதுமக்களிடையே வன்முறையை ஏற்படுத்தும் இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும்" என பெரியாரிய இயக்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது.


திருப்பூர் : "விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பொதுமக்களிடையே வன்முறையை ஏற்படுத்தும் இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும்" என பெரியாரிய இயக்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது.



இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் நன்கொடை தராத காரணத்தால் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்திற்குள் புகுந்த வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை கண்டித்தும் இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும், என வலியுறுத்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பெரியாரிய இயக்கங்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய கு. ராமகிருட்டிணன், "வடமாநில கலாச்சாரங்களை தமிழகத்தில் புகுத்தி அதன் மூலம் மக்களிடையே வன்முறையை ஏற்படுத்தும் இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும்", என கேட்டுக்கொண்டார்.



அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...