கோவை : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இன்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இன்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன் (28) மற்றும் மலர்விழி (20) தம்பதியினர். இதில் மலர்விழி தனது இரண்டாவது பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கடந்த 20ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து 21ஆம் ஆம் தேதி குழந்தைக்கு இடது கையில் ஒரு ஊசியும் இடது காலில் ஒரு ஊசியும் போடப்பட்டது.
இந்த ஊசி போடப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஆனால் பெற்றோர் குழந்தை அழுவதற்கு என்ன காரணம் என அறிய முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது தொடையில் ஊசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து காவல்துறை இடமும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இப்படியிருக்க இந்த புகாரைத் தொடர்ந்து இன்று கோவை சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையில் நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் மருத்துவமனை செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன் (28) மற்றும் மலர்விழி (20) தம்பதியினர். இதில் மலர்விழி தனது இரண்டாவது பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கடந்த 20ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து 21ஆம் ஆம் தேதி குழந்தைக்கு இடது கையில் ஒரு ஊசியும் இடது காலில் ஒரு ஊசியும் போடப்பட்டது.
இந்த ஊசி போடப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஆனால் பெற்றோர் குழந்தை அழுவதற்கு என்ன காரணம் என அறிய முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது தொடையில் ஊசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து காவல்துறை இடமும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இப்படியிருக்க இந்த புகாரைத் தொடர்ந்து இன்று கோவை சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையில் நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் மருத்துவமனை செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.