கோவையில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்

கோவை : கோவை மாநகரில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு குளக்கரைகளில் வாழும் பொது மக்களுக்கு பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை மாநகரில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு குளக்கரைகளில் வாழும் பொது மக்களுக்கு பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகரில் உள்ள முத்தண்ணன் குளம், கணபதி, உக்கடம், இந்திராநகர், வ.உ.சி நகர், காசிகவுண்டன் புதூர், குமாரசாமி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருபதாயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

இப்படியிருக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மாநகரில் உள்ள பொதுமக்களை புறநகர் பகுதிகளுக்கு மாற்றி வருகின்றனர்.

இதில் பலர் புறநகர் பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு இடம் பெயர்ந்த நிலையில், மீதமுள்ளோர் குழந்தைகளின் படிப்பு, வேலை போன்ற காரணங்களால் இடம் பெயராமல் இருக்கின்றனர்.



இந்நிலையில் இன்று தங்களுக்கு நகர்பகுதியிலயே மாற்று இடம் தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் 100 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊருக்கு வெளியே கட்டிகொடுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல முடியாது எனவும், நகரில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு எங்களுக்கு பட்டா தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



இந்தநிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கூறும்போது : 

நகர்ப் பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் பொது மக்களை அப்புறப்படுத்த கூடாது. நகர் பகுதியில் இருக்கக்கூடிய அரசுக்கு சொந்தமான இடங்கள், அல்லது தனியார் இடங்களை பணம் கொடுத்து வாங்கி இந்த மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...