கோவை : சுக்ரவார் பேட்டை பகுதியில் கிடந்த இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் உயரதிகாரிகளுக்கு தகவல் தராததையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
கோவை : சுக்ரவார் பேட்டை பகுதியில் கிடந்த இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் உயரதிகாரிகளுக்கு தகவல் தராததையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பவானி சிங்(27).இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிளைவுட் கடையில் பணி புரிந்து வந்தார். இப்படியிருக்க பிளைவுட் கடையில் இருந்து 2மாதங்களுக்கு முன்பு நின்று விட்டு வேறு வேலை தேடி வந்தார்.
மேலும் இவர் தனது நண்பர்கள் அறையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.
இப்படியிருக்க அவரது பையில் சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதாக அவரது நண்பருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அறையிலிருந்த நண்பர்கள் பைக்குள் இருப்பது துப்பாக்கி என அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெரைட்டி ஹால் போலீசார் பையிலிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு துப்பாக்கி குண்டுகளை மீட்டனர்.
பின்னர் இரண்டாவது கட்ட தேடுதலில் மீண்டும் இன்னொரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து தகவலறிந்து தலைமறைவான குற்றவாளிக்கு போலீசார் வலை வீசி உள்ளனர்.
இப்படியிருக்க பறிமுதல் செய்த துப்பாக்கிகள் குறித்து காவல் ஆய்வாளர் உயர் அதிகாரிகளுக்கு முறையான தகவல் சொல்லவில்லை என மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் செந்தில்குமார் தற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பவானி சிங்(27).இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிளைவுட் கடையில் பணி புரிந்து வந்தார். இப்படியிருக்க பிளைவுட் கடையில் இருந்து 2மாதங்களுக்கு முன்பு நின்று விட்டு வேறு வேலை தேடி வந்தார்.
மேலும் இவர் தனது நண்பர்கள் அறையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.
இப்படியிருக்க அவரது பையில் சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதாக அவரது நண்பருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அறையிலிருந்த நண்பர்கள் பைக்குள் இருப்பது துப்பாக்கி என அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெரைட்டி ஹால் போலீசார் பையிலிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு துப்பாக்கி குண்டுகளை மீட்டனர்.
பின்னர் இரண்டாவது கட்ட தேடுதலில் மீண்டும் இன்னொரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து தகவலறிந்து தலைமறைவான குற்றவாளிக்கு போலீசார் வலை வீசி உள்ளனர்.
இப்படியிருக்க பறிமுதல் செய்த துப்பாக்கிகள் குறித்து காவல் ஆய்வாளர் உயர் அதிகாரிகளுக்கு முறையான தகவல் சொல்லவில்லை என மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் செந்தில்குமார் தற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.